Monday, September 21, 2009

சென்னை புத்தகக் கண்காட்சி 2010

சென்னை புத்தகக் கண்காட்சி இந்த வருடம் டிசம்பர் கடைசி வாரத்தில் ஆரம்பித்து சனவரி முதல் வாரத்தில் முடிவடைகிறது.
வருடா வருடம் சென்னையில் சனவரி மாதத்தில் திருவிழா போல் நடைபெற்று வருகிறது தென்னிந்தியா பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி. இதில் 400க்கும் அதிகமான கடைகள் இடம் பெறும்.
வழக்கமாக சனவரி மாதம் முதல் வாரத்தில் ஆரம்பித்து பொங்கல் விடுமுறையையொட்டியை முடிவடைந்து விடும்.
ஆனால் இந்த வருடம் அப்புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி வாரத்தில் தொடங்கவிருக்கிறது.
பலரும் இதை வரவேற்கிறார்கள். பலர் இதை எதிர்க்கிறார்கள். ஆனால் எப்படியும் இந்த வருட புத்தகக் கண்காட்சி டிசம்பர் கடைசி வாரத்தில் கண்டிப்பாக ஆரம்பித்துவிடும் என்கிறார்கள்.
இதன் மூலம் எட்டுவருடங்களாக பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் இருந்த நான் இந்த வருடம் மிகவும் சந்தோசத்தில் இருக்கிறேன். எப்படியும் இந்த வருடப் பொங்கலை கொண்டாடி விடலாம் என்று.