தமிழினி பதிப்பகத்தாரின் மாத இதழ் கடந்த ஒன்றரை வருடங்களாக தமிழினி என்ற பெயரில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதற்கு பரவலான விளம்பரம் இல்லையென்றாலும் பரவலான வாசகர்கள் இருக்கிறார்கள்.
அதில் பல தரப்பட்ட தளங்களில் எழுதும் எழுத்தாளர்கள் எழுதிவருகிறார்கள்.
குறிப்பாக சமூகம், அரசியல், இயற்கை பற்றி குமரி மைந்தன்.
திணையவியல் குறித்து பாமயன்.
சிற்பவியல் குறித்து செந்தீ நடராசன்.
NGOகளின் செயல்பாடுகள் குறித்து செல்வ புவியரசன்.
இலக்கியம் குறித்து நாஞ்சில் நாடன், ஜெயமோகன், மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், ராஜ் கௌதமன், ஆ.பழனி.
தமிழர் மெய்யியல் குறித்து ஆர்.குப்புசாமி.
பல தளங்களில் எஸ்.ராமச்சந்திரன், இராம கி, பாதசாரி, கரு.ஆறுமுகத் தமிழன், பழ. கருப்பையா மற்றும் பலர் எழுதி வருகிறார்கள்.
இந்த இதழின் சிறப்பே இத்தனை தளங்களில் கட்டுரைகளை தாங்கி வருவது தான்.
மேலும் அட்டைப்படங்களில் வருகின்றன சிற்பங்கள் தமிழக கலைச் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டுவனவாக இருக்கின்றன.
தமிழ் ஆர்வலர்கள் விரும்பிப் படிக்கும் வண்ணம் உள்ளது.
இன்னும் கொஞ்சம் எளிமையான தமிழில் இருந்தால் அனைவரும் படித்து புரிந்து கொள்ள இயலும் என்பது எனது கருத்து.
தமிழின் சிறப்பையும் தமிழக கலைகளையும் முன்னிறுத்துகிறது.
தமிழினி இதழின் வலைதளம் www.tamizhini.com. ஆண்டு சந்தா ரூ. 240
தொடர்புக்கு
+91 9884196552
tamizhininool@yahoo.co.in
67, பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600014