Monday, September 21, 2009

திரு. A.K. வேங்கட சுப்ரமணியன்

திரு. அ.கி. வேங்கட சுப்ரமணியன் அவர்களுக்கு அஞ்சலிக் கூட்டம் 20ந் தேதி ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேய பாவலர் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தை உந்துநர் அறக்கட்டளையினர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்திற்கு 200க்கும் அதிகமானோர் வந்திருந்தனர். கூட்டம் ஆரம்பிக்கும் முன் தேநீர் கொடுத்தார்கள்.
கூட்டத்திற்கு திரு. அ.கி.வேங்கட சுப்ரமணியன் அவர்களின் மனைவி வந்திருந்தார். முதலில் அவரது திருவுருவப் படம் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் உந்துநர் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கே.வி பற்றி பேசினார்கள். அதன் பின்னர் 30க்கும் மேற்பட்ட மக்கள் மையத்தைச் சார்ந்தவர்கள் பேசினார்கள். இது வரை ஏ.கே.வியைப் பற்றி தெரிந்திராத எனக்கு அவர்களின் பேச்சின் மூலம் அவரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. ஆனால் எனக்கு ஆச்சரியம் இப்படியும் ஒரு மனிதரால் வாழ முடியுமா? அதுவும் உயர்பதவியில் அமர்ந்து கொண்டு.
நேர்மையானவர், கீழ்தட்டு மக்களுக்காக உழைப்பவர், லஞ்சத்தை எதிர்த்தவர், மனுதாரர்களை மன்னராக உயர்த்த பாடுபட்டவர், பணியில் நேர்மை, நுகர்வோர் விழிப்புணர்வு இப்படி அவரைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம்.
ஆனால் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் 2 நிமிடங்கள் தான்.
அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் அவரின் பணித்திறனை பற்றியும் பணி நேர்மை பற்றியும் அவரது ஆளுமையை பற்றியும் கண்ணீர் மல்க பகிர்ந்து கொண்டனர்.

<

கூட்டத்தில் ஏ.கே.வி அவர்கள் எழுதிய மக்களாகிய நாம், கட்சி ஆட்சி மீட்சி ஆகிய புத்தகங்கள் கிழக்கு் பதிப்பகத்தாரால் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவர் எழுதிய மன்னரா? மனுதாரரா? மற்றும் தட்டிக் கேட்க தகவல்கள் ஆகிய புத்தகங்கள் விரைவில் மறுபதிப்பாக கிழக்கு பதிப்பகத்தாரால் கொண்டுவரப்படுகிறது என்ற அறிவிப்பும் அங்கே இருந்தது.

கூட்டம் முடிந்ததும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் அனைவரும் ஏ.கே.வி அவர்களின் கொள்கையை உறுதிமொழியாக எடுத்துக் கொண்டனர். அவரது ஆத்மா சாந்தியடைய இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலிச் செலுத்தினார்கள்.
A.K.V the Great Man.